Thursday, May 7, 2009

மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா ஸ்பெஷல்

tblfpnnews_6764948369 காணக் கிடைக்காத காட்சி இன்று மட்டுமே: மீனாட்சியம்மன் சித்திரை திருவிழாவின் கடைசி நாளான இன்று, நமது அன்னை மீனாட்சியும், தந்தை சுந்தரேஸ்வரரும் வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி வருகின்றனர்.

சித்திரை திருவிழாவில் ரிஷபத்திற்கு மட்டும் இரண்டு நாள் இறைவனைச் சுமக்கும் பாக்கியம் கிடைக்கிறது.  ஆறாம் திருவிழாவிலும் ரிஷபமே பவனி வந்தது. எதைத் தவற விட்டாலும், ரிஷப வாகன தரிசனத்தை மட்டும் விடவே கூடாது. ஆறாம் திருநாளில் தவற விட்டவர்கள் இன்று அவசியம் தரிசித்து விடுங்கள். அந்தளவுக்கு புண்ணியமான தரிசனம் இது.

ரிஷபம் என்னும் காளை தர்மத்தின் சின்னமாகும். இதன் கட்டான உடல் நமக்கு திட மனது வேண்டும் என்பதையும், கால்கள், எவ்வளவு சுமை இருந்தாலும் அதைத் தாங்கும் தன்னம்பிக்கை வேண்டும் என்பதையும், காதுகள் இறைவனின் திருநாமத்தை மட்டுமே கேட்க வேண்டும் என்பதையும், கண்கள் நல்லதையே பார்க்க வேண்டும் என்பதையும், ஆடும் வால், தீயவற்றை ஒதுக்க வேண்டும் என்பதையும், கழுத்தில் கட்டப்பட்ட கிண்கிணி மணிகள், இறைவனை மந்திரம் சொல்லி வழிபடுவதையும் குறிக்கின்றன.

ரிஷபத்தை "அற விடை' என்பர். "அறம்' என்றால் "தானதர்மம்' மட்டுமல்ல. தர்மம் தவறாமல் வாழ வேண்டும் என்பதையும் குறிக்கிறது. தர்மம் தவறாமல் வாழ்பவரே புண்ணியத்தை அடைவதற்கு தகுதியு டையவர். அதனால் தான் தர்மமே இறைவனை சுமந்து வருவதாகச் சொல்வர். மற்ற தரிசனங்கள் எல்லாருக்கும் கிடைக்கும். ஆனால், ரிஷப தரிசனம் மட்டும் ஏதோ ஒரு பிறவியில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே கிடைக்கும். ரிஷப வாகனத்தில் பவனிவரும் சுவாமியை தரிசித்தால், இவ்வுலகில் என் னென்ன தான தர்மங்கள் உண்டோ, அத்தனையும் செய்த புண்ணியமும் கிடைக்கும்.

இந்த புண்ணியத்தை, தனது அடியார்களுக்கு வழங்குவதற்காகவே சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகின்றனர். இந்த அரிய சந்தர்ப்பத்தை நாம் நழுவ விடக்கூடாது. மீனாட்சியம்மைக்கு வைகையின் தென்கரையில் விழா எடுத்து அவளது அருளைப் பெற்று மகிழ்ந்த நாம், சுந்தரராஜப் பெருமாளாகிய அழகரை எதிர்கொண்டு அழைக்க நாளை வடகரைக்குச் செல்வோம்.

(நன்றி - தினமலர்)

No comments: