Thursday, October 15, 2009

தீபதிருநாளின் வலைமனையில் இரண்டாம் ஆண்டு தீபதிருநாள் தீபாவளி

images35 diwali-puja images444Copy of securedownload4 images88     images66  images888 images454  111  images211images8images333555images2222images11

வலைமனை பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் இனிய இரண்டாம் ஆண்டு தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

 

Monday, October 12, 2009

தீபதிருநாளில் தீபாவளி சிந்தனை

தீபத்திருநாளில்

வாழ்வில் வளமும் குதூகலமும் பெருகிட

இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

                       அன்புடன்  வைகரைதென்றல்.

 

பண்டிகை காலங்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்?

கிராமபுரங்களில் வசிக்கும் மக்கள் ஆரோக்கியமான உடல்நிலையை கொண்டுள்ளனர்.இதற்கு காரணம், நமது பாரம்பரிய நெறிமுறைகளை அவர்கள் தவறாமல் பின்பற்றுவதே ஆகும்.உடலிற்கு எண்ணெய் தேய்த்து குளிக்க்கும் போது , உடல் குளிர்ச்சி அடைவதுடன் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

இந்தியா போன்ற வெப்பமிகுந்த நாடுகளில், நமது உடல்நிலையை சீரான நிலையில் வைத்திருப்பது அவசியம்.

அன்றாட வாழ்க்கையில் நேரமின்மையின் காரணமாக, எண்ணெய் குளியலை தவிர்த்துவிடுகிறோம் ஆகவேதான், பண்டிகைகாலங்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பதன் அவசியம் பற்றி வலியுறுத்தப்படுகிறது. எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் நம்முடைய தோல் பகுதி உலர்வடையாமல் ஈரப்பதத்துடனேயே இருக்க உதவுகிறது. இந்த ஈரப்பதம், கிருமிகள் நம் தோல்பகுதி மூலம் உடலுக்குள் ஊடுருவாமல் தடுக்கிறது.

சாதாரணமாக எண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது

எண்ணெய் குளியலின் பிற நன்மைகள்:-

  • ஆரோக்கியமான உடல்நிலைஉடன், நமது சிந்தனைத்திறனையும் ஊக்குவிக்கிறது.
  • காமலை மற்றும் நோய்கிருமிகள் தாக்காமல் இருக்க உதவுகிறது
  • ஜீரண சக்தியை அதிகரிக்கிறது
  • உடலில்குளிர்ச்சி தன்மையை ஏற்ப்படுத்துகிறது.
  • குறைந்த செலவு என்பதால்  வாரம் ஒருமுறை மேற்கொள்ளுதல் நல்லது.

 

                                                                                     courtesy:Ask a doctor online

How often do you take oil bath?


Dear all,
Have you ever thought the need for oil bath in our busy schedule. In olden days our Grandmother used to run behind us with an oil bowl. Every weekend we used to take oil bath. But now that has changed. We take oil bath either on diwali or on any other festivals. It has become seasonal. And moreover we feel it as time consuming task to do it.
Let me tell you what all benefits you’ll have from oil bath.

  • Say goodbye to rough, dry skin.
  • Accumulation of dead cells will be reduced.
  • Breakage of elasten and collagen will be under control.
Only that
  • You’ll have soft and smooth skin
  • It also prevents wrinkling and sagging.
  • Also prevents Stretch marks
How to do it:
Apply oil on your body. Give simple circular strokes to relax all the muscles. Concentrate more on those areas that are prone to stretch marks. Wash it off with Besan after half an hour. Besan is a good dead cell remover.
What all oil you can use:
Coconut oil: It is considered to be the best oil. It also softens and moisturizes the skin. It prevents wrinkling and sagging.
Olive oil: It helps to combat dry skin.
Almond oil: It improves the skin complexion.
Gingelly oil: It helps to relieve from body heat.

Thursday, October 8, 2009

ன்புடையீர்,

சமீப காலமாக பங்குச்சந்தை உயர்ந்து வருவதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். இம்மாதிரியான நேரங்களில் பங்குச்சந்தையைப்பற்றிய அடிப்படை தெரியாதவர்கள்கூட பங்குச்சந்தையின் எழுச்சி காரணமாக அதில் முதலிட விரும்புவார்கள். ஒவ்வொரு முறையும் இம்மாதிரியான எழுச்சிமிக்க நேரத்தில் சந்தையின் ஆர்வத்தில் சிலர் நேரடியான முதலீட்டை மேற்க்கொள்ளாமல் சில இடைத்தரகர்கள் அல்லது அவர்களின் நிறுவனங்களின் மூலம் முதலீட்டை மேற்கொள்கிறார்கள். இவர்களுடைய ஆர்வத்தைப் பயன்படுத்தி சில நபர்கள் இவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு, விரைவில் பணத்தை பன்மடங்காக பெருக்கித்தருவதாகவோ அல்லது மாதா மாதம் ஒரு பெரிய தொகையை வட்டிபோல தருவதாகவோ கூறிவிட்டு, அவர்களிடமிருந்து பெற்ற தொகையை பங்குகளில் முதலிடுவதை விடுத்து, தினவர்த்தகத்தின் மூலம் முறைகேடுகளாக பயன்படுத்தி பணத்தை தொலைக்கும் சம்பவம் நாள்தோறும் செய்திதாள்களில் வந்தவண்ணமே இருக்கிறது. சமீப இரண்டொரு நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் சென்னையிலும், கோவையிலும் நடந்திருப்பது, படித்த, அனைத்து வசதிகளும், தொழில்நுட்பமும் உள்ள மேல்தட்டு மக்களே ஏமாந்திருப்பது, எவ்வித வசதி வாய்ப்பும் இல்லாத கிராமத்து மக்களை நினைக்கும்போது அதிர்ச்சியளிக்கின்றது.

பங்குச்சந்தையில் முதலிடுவது என்பது ஒரு மாயாஜால வித்தையல்ல. மற்ற முதலீடுகள்போல இதுவும் ஒரு எளிதான விஷயம்தான். இந்தியப்பங்குச்சந்தையில் இந்தியராக பிறந்த யார்வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும, எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யும் வகையில் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களின் நலன்களை கருத்தில்கொண்டே சில விதிமுறைகள் கடுமைப்படுத்தப்பட்டுள்ளது.

பங்குச்சந்தைகளில் ஈடுபட இடைத்தரகர்கள் எதற்கு? நீங்களே மிக எளிதாக பான்கார்டு விண்ணப்பிக்கலாம். எளிதான முறையில் டீமேட், வங்கி மற்றும் டிரேடிங் கணக்குகளை ஆரம்பிக்கலாமே. இவற்றிற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் வேலைப்பார்ப்பவர்களே உங்களுக்கு உதவுவார்களே! இப்படி இருக்கும்போது இடைத்தரகர்களை ஏன் நாடுகிறார்கள் என்பதைதான் என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

தகவல் தொடர்புகள் அதிகமில்லாத காலத்தில் ஏமாந்தார்கள் என்றால் சரி, இப்போதும் இந்நிலையே தொடர வேண்டுமா? ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்.

தமிழில் பங்குச்சந்தையைப்பற்றி விழிப்புணர்ச்சி ஏற்ப்பட பல வலைப்பூக்களை மிக சிறப்பாக செய்து வருகிறார்கள். இவர்கள் தொலைபேசி மூலமாகவும், ஈமெயில் மூலமாகவும், சாட் செய்வதன் மூலமாகவும் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எல்லாம் அவர்கள் அனுபவங்களில் மூலம் நிவர்த்தி செய்கிறார்கள். இன்னும் சிலர்கள் சிறிய அளவிலான கட்டண சேவையின் மூலம் மிகச்சிறந்த சேவை வழங்கி வருகிறார்கள். இவ்வாறு உதவி செய்வதற்கு ஆளாளுக்கு போட்டிபோட்டுக் கொண்டு உதவும் நிலையில் இடைத்தரகர்களின் நிறுவங்கள் மூலம் ஏமாறவேண்டாமே!

பங்குச்சந்தையில் முதலிட வேண்டும் உங்கள் ஆர்வத்தை வரவேற்கிறோம். ஆனால் பங்குச்சந்தையில் ஈடுபடுமுன் அதன் அடிப்படை, சாதக பாதகங்கள், ஆபத்து ஆகிய விஷயங்களை கவனத்தில் கொண்டே நேரடியான முதலீட்டில் ஈடுபட வேண்டும். உங்களிடம் உள்ள உபரி பணத்தை மட்டுமே பங்குச்சந்தையில் முதலிட வேண்டும். எக்காலத்திலும் கடன் வாங்கி பங்குச்சந்தையில் ஈடுபடாதீர்கள். நீங்கள் பங்குச்சந்தையில் முதன்முதலில் ஈடுபடும்போதும்போது மியூச்சுவல் பண்டுகளில் உங்கள் முதலீட்டை துவக்குங்கள்.

வாழ்த்துக்கள்.

தகவல் :-
நன்றி

திரு.ஜாஃபர். அவர்களுக்கு

http://sharedirect.blogspot.c0m