tag:blogger.com,1999:blog-52816127167236231882024-02-07T02:29:32.939-08:00தீபத்திருநாள்வைகரைதென்றல் (vaigaraithenral )http://www.blogger.com/profile/05735149285780447209noreply@blogger.comBlogger73125tag:blogger.com,1999:blog-5281612716723623188.post-18961153450442957592011-07-18T00:46:00.001-07:002011-07-18T00:46:46.750-07:00பெற்றோரே உஷார்: படிப்பில் மந்தமா உங்கள் செல்லம்<p> </p> <p>"என் மகனை, உயர்தர கல்விச்சேவை அளிக்கும் பள்ளியில்தான் சேர்த்திருக்கிறேன். ஆண்டுக்கு 80 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்துகிறேன். வீட்டில் தினமும் குறைந்தது நான்கு மணி நேரம் கடுமையாக பாடம் படிக்கிறான். ஆனாலும், படிப்பில் மந்தமாகவே உள்ளான். சில பாடங்களில் தேர்ச்சி பெறவே சிரமப்படுகிறான். <br />எழுத்துக் கூட்டி வாசிக்கக்கூட தெரிவதில்லை. என் மகன், "மக்காக' போய்விடுவானோ, என பயமாக இருக்கிறது டாக்டர்..." இப்படி, உளவியல் ஆலோசகரிடம் புலம்பியவர் வேறு யாருமல்ல, தனியார் கல்லூரி பேராசிரியர்; இவரது மகன் படிப்பதோ, 5ம் வகுப்பு!பேராசிரியரின் வேதனை கலந்த வார்த்தைகளை கேட்டு சிறிது புன்னகைத்த டாக்டர், அவரது மகனுடன் உரையாடி பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை செய்துமுடித்தபின், "நீங்கள் சொல்வது போல எதுவும் நடந்துவிடாது; உங்கள் மகனுக்கு "கற்றலில் குறைபாடு' தொடர்பான "டிஸ்லெக்ஸியா'(Dyslexia) என்ற பாதிப்பு உள்ளது. <br />எழுத்துக்களைக் ஒன்றுகூட்டி வாசித்தல், எழுத்துக்களின் வித்தியாசத்தை அறிதல், வார்த்தையை ஒலி பிறழாமல் உச்சரித்தல், வேண்டும் போது வார்த்தைகளை நினைவுபடுத்தி திரும்பக்கூறுதல், பிழையின்றி எழுதுதல் ஆகியவற்றில் அவனுக்கு பிரச்னைகள் உள்ளன. முறையான பயிற்சி மேற்கொண்டால் நாளடைவில் எல்லாம் சரியாகிவிடும்' என்றுகூறி, சில ஆலோசனைகளையும் தெரிவித்தார்.இந்த பேராசிரியரை போன்றே, பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் பலரும் தங்களது பிள்ளையின் படிப்பு மீது மிகுந்த கவலை கொண்டுள்ளனர்.பெரும்பாலான பெற்றோர், பிள்ளையின் படிப்பு மந்தமானதற்கான உண்மையான காரணத்தை அறியாதவர்களாக உள்ளனர். "வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடங்களை கவனிக்காமல் கோட்டைவிட்டு விடுகிறான். <br />ஏனோ, தானோவென்று தேர்வு எழுதுகிறான்...' என, கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். மேலும், தேர்வு விடைத்தாளில் கையெழுத்திட மறுத்து பிள்ளையை அடித்து, உதைக்கவும் செய்கின்றனர். பெற்றோரிடம் அடி வாங்கும் பிள்ளைகள், பள்ளிக்குச் செல்ல அஞ்சுகின்றனர்; தேர்வு நெருங்கினாலே நடுங்குகின்றனர்.அப்படியே தேர்வு எழுதினாலும், குறைந்த மார்க்குடன் கூடிய விடைத்தாள்களை பெற்றோரிடம் காண்பித்தால் அடிப்பார்களே,...என பீதிக்கு உள்ளாகின்றனர். பள்ளிக்குச் செல்ல மறுத்து,"வயிறு வலிக்கிறது' "தலை சுற்றுகிறது' என காரணங்களைக் கூறி பள்ளிக்குச் செல்லாமல் தவிர்க்க முனைகின்றனர். <br />பதறும் பெற்றோர், பிள்ளைக்கு ஏதோ நேர்ந்துவிட்டதாக கருதி, டாக்டரிடம் அழைத்துச் சென்று பலவிதமான பரிசோதனைகளுக்கும் உட்படுத்துகின்றனர். "வயிற்று வலி' "தலை சுற்றலுக்கான' காரணம் கண்டறியப்படாத நிலையில், மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்; வீட்டில் அமைதியிழப்பும் ஏற்படுகிறது. <br />"இதுபோன்ற நிலைக்கு காரணம், பிள்ளைகள் அல்ல; பெற்றோரே' என்கி ன்றனர், உளவியல் ஆலோசகர்கள். தங்களது பிள்ளைகளிடம் கனிவாக பேசி, கலந்துரையாடி, அவர்களது நடவடிக்கைகளை நிதானித்து கவனித்து உண்மையான காரணங்களை கண்டறிவதற்கான முயற்சியில் ஈடுபட தவறுகின்றனர். வெறுமனே "படி, படி' என மிரட்டி அச்சுறுத்துவதையே வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். <br />"டிஸ்லெக்ஸியா' என்றால் என்ன ? கற்றலில் குறைபாடுள்ள பிள்ளைகளின் பிரச்னைகளுக்கு, "டிஸ்லெக்ஸியா' (Dyslexia / Specific Learning Disability)) என்ற பாதிப்பே முக்கிய காரணம் என்கின்றனர், உளவியல் ஆலோசகர்கள். மொழி கற்கும், எழுதும் திறனில் குறைபாடுள்ளவர்கள், "டிஸ்லெக்ஸிக்ஸ்' என்றழைக்கப்படுகின்றனர். இந்த பாதிப்புடைய குழந்தைகளின் பேச்சு உறுப்புகள், கண் பார்வைக்கான உறுப்புகள், கேட்பதற்கான உறுப்புகள் மற்றும் மூளை உறுப்புகள் அனைத்தும் பிற குழந்தைகளின் உறுப்புகளை போன்று இயல்பாகவே இருக்கும். எனினும் வார்த்தைகளை எழுத்துக்கூட்டி படித்தல் மற்றும் படித்ததை நினைவில் நிறுத்தி பிழையின்றி எழுதுதல் திறன் குறைவாகவே இருக்கும். இந்த மாதிரியான குழந்தைகள் எழுத்துக் கூட்டி படிக்கவே மிகவும் சிரமப்படுவர். "டிஸ்லெக்ஸியா' என்பது நோயல்ல. மூன்று முதல் ஏழு வயது வரையுள்ள குழந்தைகளிடம் காணப்படும் கற்றலில் குறைபாடுள்ள ஒரு பாதிப்பு. இந்த பாதிப்புள்ள குழந்தைகளை உயர்கல்விச் சேவை அளிக்கும் பள்ளியில் சேர்த்தாலும், படிப்பு இயல்பான முறையில் வராது என்கின்றனர்' உளவியல் ஆராய்ச்சியாளர்கள். <br />விளைவுகள்: "டிஸ்லெக்ஸியா' என்பது மூளை தொடர்பான பாதிப்புகளில் ஒன்று. பிறக்கும்போது குழந்தையின் இடது பக்க மூளையில் ஏற்படும் காயம், அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் இந்த பாதிப்பு நேரிடுகிறது. இப்பாதிப்புடைய குழந்தைகள், இடது பக்க மூளை பூரண செயல்பாடுடைய குழந்தைகளில் இருந்து கற்றல் திறனில் வேறுபடுவர். இவர்கள் எழுத்துக்களின் வித்தியாசம் மற்றும் அவற்றின் ஒலி அமைப்பை வேறுபடுத்தி பார்க்க முடியாமல் குழப்பமடைவர். உதாரணமாக, ஆங்கில எழுத்தான b யை, d என்று மாற்றி வாசிப்பர்; எழுதுவர். கணிதத்தில் 18 என்ற எண்ணை, 81 என்று மாற்றி எழுதுவர்; ஆங்கில எழுத்தான B என்பதை 8 எனவும் தவறாக எழுதுவர்; வாசிப்பர். <br />எழுத்துக்கூட்டி உச்சரிப்பதிலும் தவறுகளைச் செய்வர். படித்த பாடங்களை வரிசைக் கிரமமாக மூளையில் பதிவு செய்து வைத்து, வேண்டும்போது அவற்றை நினைவுக்கு கொண்டுவருவதில், எழுதுவதில் திணறுவர். தேர்வின் போது கேள்வித்தாளில் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கான பதிலை ஏற்கனவே பல முறை படித்திருந்தாலும், பதிலுக்கான வார்த்தைகளை, வாக்கியங்களை ஒருங்கிணைத்து எழுத சிரமப்படுவர்.படித்த பாடத்தின் வரிகள், சம்பவங்கள் ஞாபகத்துக்கு வந்தாலும் அடுத்தடுத்த வரிகளை ஞாபகத்துக்கு கொண்டுவந்து கோர்வையாக எழுத முடியாமல் குழப்ப நிலைக்கு சென்றுவிடுவர். வகுப்பில் சக மாணவர்களை காட்டிலும் குறைந்த மதிப்பெண் பெறும்போது, தாழ்வு மனப் பான்மைக்கு உள்ளாவர்; அதனால், தனித்திருக்கவும் விரும்புவர். <br />அறிகுறிகள் என்ன?: *பாட புத்தகங்களில் உள்ள பாடல்களை பாட முடியாமல் சிரமப்படுவர்.*வார்த்தைகளை, வாக்கியங்களை உச்சரிக்க தடுமாறுவர்; தவறாக உச்சரிப்பர்.*எழுத்து, எண்களை ஞாபகத்தில் வைத்திருக்க முடியாமல் தவிப்பர்.*வரிசைப்படி வாக்கியங்களை கோர்வையாக எழுத முடியாமல் குழப்பமடைவர்.*கதையை கேட்டு புரிந்து கொண்டாலும், கோர்வையாக கூற இயலாமல் தடுமாறுவர்.*ஆசிரியர் கேள்வி எழுப்பினால், பதில் கூற நீண்ட நேரம் எடுத்துக்கொள்வர்.*நீண்ட வார்த்தைகளை உச்சரிக்க தடுமாறுவர்.*தவறாக உச்சரித்து, தவறாக எழுதுவர். <br />*குறித்த நேரத்தில் வீட்டுப்பாடத்தை முடிக்க முடியாமல் திணறுவர்.*பள்ளிக்கு செல்ல அஞ்சி, உடல் உபாதைகளை கூறுவர்.*பேசியதை, எழுதியதை அடிக்கடி மறந்து விடுவர்.*பாடம் படிக்கும் போது வார்த்தைகளை விட்டுவிட்டு படிப்பர்.*கணிதக் குறியீடுகளை நினைவில் நிறுத்த இயலாமல் குழம்புவர்."டிஸ்லெக்ஸியா' பாதிப்புடைய குழந்தைகள், தங்களது இயலாமையை இப்படி வெளிப்படுத்துவர்...*என்னால் நன்றாக சிந்திக்க முடிகிறது; ஆனால், வார்த்தை களை எழுத முடியவில்லை.*எவ்வளவுதான் படித்தாலும், மண்டையில் ஏறமாட்டேன் என்கிறது.*ஆசிரியர் நடத்தும் பாடம் புரிவதில்லை; புரிந்தாலும் மறந்துபோகிறது.*அடிக்கடி ஞாபக மறதி ஏற்படுகிறது.*குறித்த நேரத்தில் பாடங்களை படித்து முடிக்க முடியவில்லை.*கணிதத்தில் கழித்தல், கூட்டல், வகுத்தல் வழிமுறைகளை உட்கிரகிக்க முடிவதில்லை என, புலம்புவார்கள்.குழந்தைகள் இதுபோன்று அடிக்கடி காரணங்களை கூறும்போது, அவர்களுக்குள்ள "டிஸ்லெக்ஸியா' பாதிப்பை பெற்றோரால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். அவ்வாறு அறியும் பெற்றோர், குழந்தைகளை நிர்வகிப்பதில் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும். பாதிப்பில் இருந்து குழந்தையை மீட்டெடுக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ள உடனடியாக உளவியல் ஆலோசகர்களை அணுகுவது அவசியம். <br />"கவலை வேண்டாம்; பயிற்சி இருக்கு': <br />கோவையில் "டிஸ்லெக்ஸிக்ஸ்' மாணவ, மாணவியருக்கான சிறப்பு வகுப்புகளை நடத்தும் மருத்துவ உளவியல் ஆலோசகர் டாக்டர் லட்சுமணன் கூறியதாவது:ஒரு குழந்தை "டிஸ்லெக் ஸியா'வால் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிய, இரண்டு மணி நேரம் தேவை. <br />முதலில், குழந்தையின் அறிவுத்திறனை பரிசோதிப்போம். அதன்பின், என்ன காரணத்தால் கற்றலில் குறைபாடு உள்ளது என, ஆராய்கிறோம். இவர்களுக்கான பாதிப்பை, "டிஸ்லெக்ஸியா' என்கிறோம். சில குழந்தைகளுக்கு எழுதுதலில் பிரச்னை இருக்கும்; இவர்களுக் கான பாதிப்பை, "டிஸ்கிராபியா' (Disgraphia) என்கிறோம். "டிஸ்கிரா பியா' என்றால், எழுதுவதில் குறைபாடுள்ளது என்று பொருள். சில குழந்தைகள் கணக்கு போடுவதில் பின்தங்கியிருப்பர்; இவர்களுக்குள்ள பாதிப்பை "டிஸ்கால் குலியா' (Disgraphia) என்கிறோம். <br />ஆசிரியர்கள், பள்ளியில் பாடம் நடத்துகின்றனர். இதற்கு பார்த்தல், கேட்டல் இருந்தால் போதுமானது. ஆனால், "டிஸ்லெக்ஸிக்ஸ்' மாணவர் களுக்கு நாங்கள் நடத்தும் படிப்பு முறை (Leaqtning Stxtle ) முற்றிலும் மாறுபட்டது. குழந்தைகளின் பார்த்தல், கேட்டல் முறைகளை மட்டும் பயன்படுத்துவதில்லை. தொடுதல், வாசனை, சுவை ஆகியவற்றுடன் புலன் சம்பந்தப் பட்ட போதனை முறைகளை கை யாண்டு கற்றல் திறனை அதிகப் படுத்துகிறாம். உதாரணமாக, ஆங்கில எழுத்துக்களை வெறுமனே போர்டில் எழுதிப்போடுவ தில்லை. ஒரு எழுத்தை விரல்களால் உருவகப் படுத்தி காட்டி பாடம் நடத்துகிறோம். அதை பார்க்கும் குழந்தைகள், அந்த எழுத்துக்களை எழுதும்போது சந்தேகம் இருப்பின், நாங்கள் முன்பு உருவகப்படுத்தி யவாரே, தங்களது விரல்களால் அந்த எழுத்தை உருவகப்படுத்தி பார்த்து சரியாக எழுதி விடுவார்கள். தொடுமணல் முறையிலும் பாடம் நடத்துகிறோம். அதாவது, கூடையில் மணல் பரப்பி எழுத்துக்களை அதில் எழுதிக் காட்டியும் பாடம் நடத்துகிறோம். தீவிர பாதிப்புடைய மாணவர்களுக்கு சிறப்பு பாடவகுப்புகளையும் நடத்துகிறோம். கற்றலில் குறைபாடு உடைய மாணவ, மாணவியருக்கு பொதுத்தேர்வில் சில சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுகின்றன; இதற்கான அரசு உத்தரவும் உள்ளது. "டிஸ்லெக்ஸிக்ஸ்' மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு எழுதம்போது கூடுதலாக அரை மணி நேரம் அனுமதிக்கப்படுகிறது; எழுத்துப் பிழைகளுக்கு மதிப்பெண் குறைத்து மதிப்பிடப்படுவதில்லை; கணித தேர்வின்போது "கால்குலேட்டர்' பயன்படுத்த சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது; ஆங்கிலம் வழியில் கல்விகற்கும் மாணவர்கள் தமிழ் மொழித்தேர்வை எழுதுவதிலும், தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில மொழி தேர்வில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இச்சலுகையை பெற தகுதியான மாணவ, மாணவியர் மனநல டாக்டரிடம், மருத்துவ உளவியல் ஆலோசகரிடமும் சான்று பெற்று, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் தேர்வுக்கு முன் சமர்ப்பித்தால், சிறப்பு சலுகைகளை பெற முடியும்.ஆனால், டிஸ்லெக்ஸியா பாதித்த மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர் மத்தியில் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லை. முறையான பயிற்சி பெற்றால், "டிஸ்லெக்ஸியா' பாதிப்பிலிருந்து குழந்தைகள் விடுபடலாம். இதுதொடர்பான உளவியல் ஆலோசனைகளுக்கு 98420 06144 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, டாக்டர் லட்சுமணன் தெரிவித்தார்."பிறப்பு அதிர்ச்சியே முக்கிய காரணம்' <br />மன நல டாக்டர் மணி கூறியதாவது:"டிஸ்லெக்ஸியா' பாதிப்பு, பிறப்பின்போது குழந்தைக்கு நேரிடும் ஒருவித அதிர்ச்சியின் காரணமாக (Birth Trauma, Birth Asphyxia) ஏற்படுகிறது. பேறுகால தாய்மார்களின் "பனிக்குடம்' உடையும்போதும், சிசுவின் கழுத்தில் தொப்புள் கொடி சுற்றும் போதும், மூளைக்கு சப்ளையாகக்கூடிய ஆக்ஸிஜன் தடைபடுகிறது. இதனால், மூச்சுக்குழல் அடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மூளை நரம்பு மண்டலத்தில் பரிசோதனையில் கண்டறிய முடியாதபடி பாதிப்பும் உண்டாகிறது. தவிர, பிரசவ நிகழ்வின்போது குழந்தையின் தலைப்பகுதியில் காயம் (ஆபரேஷனின் போது), வலிப்பு ஏற்படும் போதும் கூட "டிஸ்லெக்ஸியா' பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு பெற்றோர் வழி பரம்பரையாக குழந்தைகளுக்கு வரவும் வாய்ப்புள்ளதாக நவீன மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.இளம் வயது குழந்தைகளுக்கு எதிர்பாராதவிதமாக தலையில் அடிபட்டாலும் பாதிப்பு ஏற்படும். குழந்தையின் மூளையில் அதாவது, நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. "டிஸ்லெக்ஸியா' பாதித்த குழந்தைகளுக்கு மூளையில் பெரிய அளவிலான பாதிப்பு அல்லது குறைகள் இருப்பதாக சொல்ல முடியாது. <br />மூளைப்பகுதியை "ஸ்கேன்' செய்து பார்த்தாலும் "நார்மலாகவே' இருக்கும். நரம்பு மண்டலத்தின் மேல் குறிப்பிட்ட "சர்க்யூட்'டில் குறைபாடு ஏற்பட்டிருக்கும்போது (Improper Development Of Sound Symbol Correspondents) வார்த்தைகள் கோர்வையாக வராது; விட்டு விட்டு வரும். பேசும்போதும், எழுதும்போதும் வார்த்தைகளை தேடுவார்கள்; படிப்பில் நாட்டமிருக் காது; அதேவேளையில், அறிவுத் திறன் மிகவும் நன்றாகவே இருக்கும்.மற்றவர்களை போன்று சராசரியான அல்லது மேம்பட்ட நுண்ணறிவு படைத்தவர்களாக இருப்பர். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளையும், "டிஸ்லெக் ஸியா'வால் பாதித்த குழந்தை களையும் ஒன்றாக கருத முடியாது; முற்றிலும் மாறுபட்டவர்கள். பள்ளி மாணவ, மாணவியரில் 10 முதல் 15 சதவீத பேருக்கு ஏதோ ஒரு விதத்தில் "டிஸ்லெக்ஸியா' இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எல்லா பள்ளிகளிலும் இதுபோன்ற பாதிப்புடைய மாணவ, மாணவியர் உள்ளனர். "டிஸ்லெக்ஸியா' பாதிப்புக்கு எவ்விதமான மருந்து, மாத்திரைகளும் கிடையாது. டிஸ்லெக்ஸியா தொடர் பான மருத்துவ ஆலோசனைகளுக்கு 98422 13043 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, டாக்டர் மணி தெரிவித்தார். <br />"பிற மாணவர்களுடன் ஒப்பிடாதீர்கள்';மனநலம் மற்றும் குடும்ப நல ஆலோசகர் கருப்புசாமி கூறியதாவது:கற்றலில் குறைபாடுடைய குழந் தைகள், மற்ற சராசரி குழந்தைகளின் அறிவுத்திறனை காட்டிலும் புத்தி கூர்மையானவர்களாக, தனித்திறன் பெற்றவர்களாக இருப்பர். கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளை சரியான நேரத்தில் கண்டறிந்து, அவர்கள் மீது ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தீவிர கவனிப்பும், கண்காணிப்பும் மேற்கொண்டு அந்த குழந்தைகளின் குறைபாடுகளுக்கு தீர்வு காண வேண்டும். கல்விமுறை சாராத பயிற்சிகளை அளிக்கலாம். அவர்களது ஆசை, நோக்கம், எண்ணம், கொள்கை ஆகியவற்றை கண்டறிந்து, அதற்கேற்ப அவர்கள் விரும்பும் துறையில் பயிற்சி அளிக்க வேண்டும். அந்த மாதிரியான பயிற்சிகள் விளையாட்டுத்துறை சார்ந்ததாகவும், தொழில் சார்ந்ததாகவும் கூட இருக்கலாம். இப்பணியில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு மகத் தானது. அவ்வாறு முறையான பயிற்சி அளித்தால், கற்றலில் குறை பாடுள்ள குழந்தைகளும் பிற்காலத்தில் சாதனையாளராக உருவாவர். அவ்வாறில்லாமல் தாழ்த்தி பேசுவது, பிற மாணவர்களுடன் ஒப்பிட்டு பேசுவது, அவர்களுக்கு ஒருவித தாழ்வு மனப்பான்மையையே ஏற்படுத்தும்.இவ்வாறு, கருப்புசாமி தெரிவித்தார். <br />"அச்சம் வேண்டாம்... மேதைகளும் உள்ளனர்:"டிஸ்லெக்ஸியா' பாதித்த மாணவர்களின் எதிர்காலம் பாழாகிவிடுமோ என்ற அச்சம் பெற்றோருக்கு தேவையில்லை' என்கிறார், மருத்துவ உளவியல் ஆலோசகர் லட்சுமணன். அவர் கூறுகையில், "கணித மேதை ராமானுஜர், அறிவியல் மேதை தாமஸ் ஆல்வா எடிஸன் மற்றும் அறிவியல் அறிஞர்கள் ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன் உள்ளிட்டோரும் கூட "டிஸ்லெக்ஸியா'வால் பாதிக்கப்பட்டவர்கள்தான். தங்களது அபரிமிதமான அறிவால் மேதைகளாக பளிச்சிட்டார்கள். <br />இவர்களது வலது பக்க மூளை "கிரியேட்டிவ்' சார்ந்த விஷயங்களில் உச்சகட்ட நிலையில் செயல்பட்டுள்ளது. அதனால், "டிஸ்லெக்ஸியா' உள்ளவர்களின் எதிர்காலம் எந்த விதத்திலும் பாதிக்கப் படுவதில்லை. புதியவற்றை உருவாக்கவும், புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவும் மனிதனின் வலது மூளை "பக்க பலமாக' உள்ளது. இடது மூளை மொழித்திறன் மற்றும் கற்றல் தொடர்பானவற்றை கவனி க்கிறது. எனவே, பிள்ளைகளின் படிப்பில் பின்னடைவை பார்த்து, எதிர்கால வாழ்க்கை இருண்டு விட்டதாக பெற்றோர் வேதனைப்பட தேவையில்லை.- ‌கே.விஜயகுமார் -</p> <p> </p> <p>(நன்றி - தினமலர்)</p> வைகரைதென்றல் (vaigaraithenral )http://www.blogger.com/profile/05735149285780447209noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5281612716723623188.post-90045544204922358852010-06-14T06:48:00.001-07:002010-06-14T06:48:41.729-07:00சம இரவு நாள்<p><a href="http://lh3.ggpht.com/_b-CduGORYic/TBYzMjHaywI/AAAAAAAAAQs/-dZfngEcfPA/s1600-h/image%5B4%5D.png"><img style="border-right: 0px; border-top: 0px; border-left: 0px; border-bottom: 0px" height="392" alt="image" src="http://lh3.ggpht.com/_b-CduGORYic/TBYzN3JtHII/AAAAAAAAAQw/GA9eHGNRsv4/image_thumb%5B2%5D.png?imgmax=800" width="450" border="0" /></a> </p> <p> </p> <p>சம இரவு நாள்(Equinox) என்பது சூரியன் நிலநடுக்கோட்டினை கடந்து செல்லும் நாளாகும். ஆண்டுக்கு இருமுறை சூரியன் இவ்வாறு நிலநடுக்கோட்டினை கடப்பது நிகழும். சம இரவு நாள் இவற்றில் எந்தவொரு நாளையும் குறிக்கும். இந்நாட்களில் இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும். இலத்தீனில் ஈக்வீநாக்சு என வழங்கப்படுகிறது. ஈக்வீ எனபது சமம்  என்றும் நாக்சு என்பது இரவு என்றும் பொருள்படும். <br />சம இரவு நாட்கள் என்று நிகழும் என்பது நிலநடுக்கோட்டிலிருந்து எத்தனை தொலைவு தள்ளி அளக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. சாதாரணமாக மார்ச் 20 அன்றும் செப்டம்பர் 22 அன்றும் இவை நிகழும். <br />நிலநடுக்கோட்டிற்கிணையான வட்டப்பாதையில் வலம் வரும் செயற்கைகோள்கள்,இந்நாட்களில் புவிக்கு பின்புறம் வரும் நேரம் சூரியகிரகணத்தை சந்திப்பதால் அந்நேரத்தில் சேமிப்பு மின்கலங்களை பயன்படுத்தும்;பயனர் தகவல்களை சுமக்காது. <br />புவியின் வடக்குப்பகுதியில் இவை இளவேனில் மற்றும் இளங்கூதிர் காலங்கள் துவங்கும் நாட்களாக அறியப்படுகின்றன. பொதுமக்களும் இந்நாட்களை எளிதாக அறிய முடிவதால்,பல பண்பாடுகளில் இந்நாட்களில் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.</p> <p> </p> <p>நன்றி - தினகரன் </p> வைகரைதென்றல் (vaigaraithenral )http://www.blogger.com/profile/05735149285780447209noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5281612716723623188.post-28106295601665996482010-05-05T07:21:00.001-07:002010-05-05T07:21:13.728-07:00யானையின் உச்சி முதல் பாதம் வரை<p> <a href="http://lh3.ggpht.com/_b-CduGORYic/S-F-ugazc7I/AAAAAAAAAQY/kUf0SyEVsZw/s1600-h/image6.png"><img style="border-right-width: 0px; border-top-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px" border="0" alt="image" src="http://lh4.ggpht.com/_b-CduGORYic/S-F-v3ZfgaI/AAAAAAAAAQc/4nikjlLXf9k/image_thumb2.png?imgmax=800" width="244" height="151" /></a> <a href="http://lh4.ggpht.com/_b-CduGORYic/S-F-z1B_s7I/AAAAAAAAAQg/zuLPgSYESOA/s1600-h/image5.png"><img style="border-right-width: 0px; border-top-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px" border="0" alt="image" src="http://lh5.ggpht.com/_b-CduGORYic/S-F-1t5JJcI/AAAAAAAAAQo/LPbzPeovDB4/image_thumb1.png?imgmax=800" width="244" height="152" /></a> </p> <p>யானை நாம் எல்லாரும் நேசிக்கும் விலங்கு. பெரிய கால் கள், அகன்ற காதுகள், துதிக்கை, தந்தம் என பார்ப்பதற்கு முரடாக இருந்தாலும், 'மதம்' பிடிக்கும் காலத்தை தவிர, மற்ற நேரங்களில் பரம சாது.சொன்னதை கேட்கும் நல்ல பிள்ளை. இதன் குணாதிசயங்கள் சுவாரஸ்யமானவை. இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான் உட்பட 13 ஆசிய நாடுகளில் 50,000 யானைகள் இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.</p> <p>ஆசியாவில் மூன்று வகையான யானைகள் காணப்படுகின்றன. தென்மாநிலங்கள் மற்றும் இலங் கையில் காணப்படும் யானைகளின் நெற்றியில் செம்புள்ளிகள், சிவப்பான காது மடல்கள் இருக்கும்.வடமாநிலங்கள் மற்றும் மியான்மர் நாட்டில் காணப்படும் யானைகள் கொஞ்சம் உயரம் குறைவானவை. இந்தோனேஷியா, மலேசியாவில் காணப்படும் யானைகள் மிகவும் குள்ளமானவை. </p> <p>'பேச்சலர்' யானைகள்: கூட்டமாக வாழக்கூடியவை. ஆண் யானை பருவ வயதை(15) அடைந்தவுடன் மற்ற யானைகளால் தனியே விரட்டி விடப்படும். இப்படி விரட்டப்பட்ட 'பேச்சலர்கள்' தனிக்கூட்டமாக வாழும்.வயதான பெண் யானைதான் மற்ற யானைகளுக்கு வழிகாட்டியாக தலைமை வகித்து முன்னே செல்லும். குட்டிகளை கண்டிப் புடன் வளர்க்கக்கூடியவை. </p> <p>அடுத்த 'சீனியாரிட்டியான' யானை, வயதான பெண் யானைக்கு பிறகு 'பதவிக்கு' வரும். யானைகள் கண்ட கண்ட பாதைகளில் செல்லாது. உணவு, தண்ணீர் உள்ள இடத்தில், என்றைக்காவது குடும்பம் குடும்பமாக சந்தித்துக் கொண்டால் ஒரே கும்மாளம்தான். வாயின் வெட்டுப்பல்தான் தந்தம். இது இல்லாத ஆண் யானைகளை 'மக்னா' என்கின் றனர். யானையின் வால் அடிப் பகுதியில் மேடாக இருந்தால் அது ஆண் யானையாகவும், 'வி' வடிவில் இருந்தால் பெண் யானையாகவும் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.</p> <p>தொடர்பு கொள்வதில்கில்லாடிகள்: இயற்கையாகவே பார்க்கும்திறன் குறைந்த யானைகள், தொடுதல், அருகில் இருப்பவற்றை பார்த்தல், சத்தம், ரகசியமாக சத்தமிடுதல், யானைகளிலிருந்து வெளிப்படும் ஒருவித வாசனைகளால் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன.மகிழ்ச்சியாக இருக்கும் போது பிளிறும். கோபமாக இருக்கும் போது 'கிரீச்... கிரீச்...' என்ற சத்தத்தை எழுப்பும். ஒரு கி.மீ., வரை 'வாசம்' பிடிக்கும்.</p> <p>தோலின் எடை 1,000 கிலோ: உணவு, தண்ணீர், பசுமையான இடங்கள் போன்றவற்றை கணக் கிட்டு, சராசரியாக ஆண்டுக்கு ஒரு யானை 750 சதுர கி.மீ., வரை சுற்றி வரும். இயற்கையாகவே யானைக்கு ஜீரண சக்தி குறைவு என்பதால், யானை ஒன்றுக்கு தினமும் 200-250 கிலோ புற்கள் தேவை. இதில் 45-50 சதவீதம் வரை மட்டுமே ஜீரணமாகும்.இதனால், தினமும் 20 முறையாவது சாணம் இடும். ஜீரண சக்தி குறைவால், 18 மணி நேரம் வரை சாப்பிட வேண்டிய கட்டாயம் யானைக்கு உண்டு.</p> <p>காலை மற்றும் மாலை 4 மணிக்கு மேல் யானைகள் சுறுசுறுப்பாக இருக்கும். இதன் சராசரி எடை 4,000 கிலோ. தோலின் எடை மட்டும் 1,000 கிலோ.தினமும் 200 லிட்டர் வரை தண்ணீர் தேவை. பொதுவாக யானைகள் நின்றுக்கொண்டும், படுத்துக் கொண்டும் தூங்கும் தன்மை உடையவை. நிழல், உணவு கிடைக்காதபட்சத்தில் 'டென்ஷன்' ஆகும்.மனிதன், யானை, டால்பின் இந்த மூன்றுக்கும் மூளையில் 'எமோஷன் மையம்' ஒத்திருப்பதால், மனிதன் போன்று புத்திசாலியான விலங்காக கருதப்படுகிறது. ஞாபக சக்தி அதிகம்.</p> <p>தும்பிக்கையே நம்பிக்கை: வறட்சி காலத்தில் தண்ணீர் இல்லாதபட்சத்தில், ஈரப்பதமான இடத்தை துதிக்கையால் தோண்டி தண்ணீர் பருகும்.கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களை தேடி, இயற்கையாக உள்ள உப்புப் பாறைகளை உடைத்து, சாப்பிடும். மூக்கும், மேல் உதடும் சேர்ந்த துதிக்கை 60,000 தசை நார்களால் ஆனது. ஒருமுறை 10 லிட்டர் தண்ணீர் உறிஞ்சும். தண்ணீர் கிடைக்காத போது, தொண்டை பகுதி, வயிற்று பகுதியிலிருந்து ஒரு லிட்டர் வரை தண்ணீரை உறிஞ்சி எடுத்து சமாளிக்கும்.</p> <p>காதை ஆட்டுவதன் ரகசியம்: யானையில் நகத்தில் மட்டுமே வியர்வை சுரக்கும். மற்ற இடங் களில் சுரக்காததால், உடல் வெப்ப நிலையை சீராக வைத்துக் கொள்ள, ரத்த நாளங்கள் அதிகமுள்ள காதை ஆட்டிக் கொண்டே இருக்கும்.இதன்மூலம் உடல் வெப்பநிலையை 1 டிகிரி செல்சியஸ் வரை குறைக்கும். </p> <p>தவிர, உடல் வெப்பத்தை குறைக்க, தன் மேல் தண்ணீரை தெளித்தல், மண்ணை போட்டுக் கொள்ளுதல், எச்சிலை விழுங்குதல் போன்றவற்றால் சமாளிக்கும்.தூண்கள் போன்ற கால்களால் வேகமாக ஓட முடியுமே தவிர, தாவ முடியாது. முரடாக தெரியும் அந்த பாதம் மென்மையானது. நடக்கும்போது விரியும். தரையில் இருந்து காலை எடுக்கும் போது சுருங்கும்.</p> <p>மதம் மூன்று மாதம்: ஆண் யானைக்கு காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள வீக்கமான பகுதியில் மதநீர், ஆண்டுக்கு ஒருமுறை வழியும். இதைதான் 'மதம்' என்கின்றனர். இது மூன்று மாதங்கள் வரை இருக்கும். 15 வயது முதல் 20 வயதுக்குள் மதம் பிடிக்க ஆரம்பித்து, 45 வயது வரை ஏற்படும். அப்போது விதைப்பை 16 மடங்கு பெரியதாகும்.மற்ற ஆண் யானைகளை பிடிக்காது. பெண் யானையுடன் சேர துடிக்கும். அரைமணி நேரம் உணர்வுகளை தூண்டி, ஒரு நிமிடத்தில் இணைந்து விடும். குறிப்பிட்ட காலம் வரை அந்த பெண் யானையுடனே 'ஹனிமூன்' செல்லும்.</p> <p>அங்குசம் தேவையா? பெரிய உருவமான யானை, மூன்று அடி உயரமுள்ள அங்குசத்திற்கு கட்டுப்படும் ரகசியம் எதுவுமில்லை. யானைக்கு 110 வர்ம இடங்கள் உள்ளன.அதில் ஏதாவது ஒன்றை அழுத்தி குத்தும்போது, யானை கட்டுப்படும். மற்றபடி, யானைக்கும், அங்குசத்திற்கும் சம்பந்தமில்லை.</p> <p>பாலித்தீனால் பலியாகும் யானை: பரவலான மலைப்பகுதிகள் இல் லாமல் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள இடைவெளிகள், மனிதன் ஏற்படுத்திய வளர்ச்சி, காட்டுத்தீ, கால்நடைகள், மரம் சேகரிப்போரால் யானைகள் பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.</p> <p>சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவில் அதிக யானைகள் (59 சதவீதம்) திருட்டுக் கும்பலால்தான் வேட்டையாடப்பட்டுள்ளன. ரயிலில் அடிபடுதல் 15 சதவீதம், விஷஉணவு 13, மின்சாரம் பாய்ந்து 8 சதவீத யானைகள் பலியாகி இருக்கின்றன.இதில் புதிதாக சேர்ந்திருப்பது மக்காத பிளாஸ்டிக் பொருட்கள். காட்டுப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிலர், காலியான பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் வாட்டர் கேன்களை கையோடு கொண்டு செல்லாமல், அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர்.</p> <p>அதை உண்ணும் யானை போன்ற விலங்குகள், ஜீரணம் ஆகாமல், வயிறு உப்பி இறப்பது இன்றும் நடக்கிறது. தவிர, இயற்கையாகவே யானையின் குடலுக்குள் உருவாகும் புழுக்கள், பூச்சிகளாலும் இறப்பு நேரிடுகிறது.காசநோயாலும் இறக்கின்றன. இப்படி நோய்வாய்ப்பட்ட யானை களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தும் ஊசி, மருந்துகளில் 60 சதவீதம் மனிதனுக்கு பயன்படுத்தக் கூடியவை.</p> <p>யானையை பாதுகாப்பது முக்கியம்: யானைகள் நல்ல பழங்கள், மரங்களில் உள்ள செடிகள், இலைகளை விரும்பி உண்ணும்.அதிலிருந்து கீழே விழும் விதைகள், மக்கி செடிகளாக வளரும். அதை நம்பி காளான் வளரும். காளானை நம்பி சில உயிரினங்கள் இருக்கின்றன. காடுகளில் யானை உருவாக்கும் புதிய பாதைகளில் மற்ற விலங்குகள் எளிதாக செல்ல முடியும்.</p> <p>யானை சாப்பிட்டது போக, கீழே போடும் செடி, கொடிகளை, பின்தொடர்ந்து வரும் காட்டு எருது, மான்கள் உண்ணும். மரக் கிளைகளை உடைத்து இலைகளை யானை உண்பதால், வெயில்படாத இடங்களில்கூட சூரியக்கதிர்கள் ஊடுருவி புற்கள் வளரும். அதை நம்பி பல சிறு உயிரினங்கள் வாழ்கின்றன.இப்படி பல உயிரினங்கள் வாழ நேரடியாகவும், மறைமுகமாகவும் யானைகள் உதவுகிறது. காடுகள், காடுகளாக இருக்க பாதுகாவலனாக இருப்பது யானை. இதை பாதுகாப்பது நமது கடமை.</p> <p>யானைகளின் பரிணாம வளர்ச்சி:குரங்கில் இருந்து மனிதர் தோன்றியதாக வரலாறு. அதுபோல தற்போதைய யானைகள், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பன்றி போன்ற உருவத்தில் இருந்து தட்பவெப்ப சூழ்நிலைகளால் மாற்றமடைந்து தற்போதைய உருவத்தை அடைந்தவை.</p> <p>பல கோடி மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மூன்தெரியம் எனப்பட்ட பன்றி போல் உருவத்தில் தோன்றின. பின் மாமூத் என்ற பரிணாம வளர்ச்சி பெற்றது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமூத் இனங்கள் காணப்பட்டுள்ளன. பனிக்காலமாக இருந்ததால் அவை தோல் வளர்ந்து காணப்பட்டன.அதிலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்று தற்போதைய உருவத்தை யானைகள் பெற்றன. தற்போது உலகில் 13 நாடுகளில் யானைகள் உள்ளன. இவற்றின் பூர்வீகம் ஆப்ரிக்கா.</p> <p>ஆசியா யானைகளின் மொத்த எண்ணிக்கை:50,000 இந்தியா:27,500 - 28,500 தென்மாநிலங்கள்: 15,000 -16,000 தமிழகம்:3500 - 4000</p> <p>இரட்டையர்களும் உண்டு:யானைகள் சராசரியாக 70 வயது வரை வாழும். பெண் யானைகள் 15 வயதில் 'மேஜராகி' விடும். 15-20 வயதில் ஆரம்பித்து 55 வயது வரை குட்டிப் போடும்.தனது வாழ்நாளில் 8-12 குட்டிகளை ஈன்றெடுக்கும். பிரசவ காலம் 18-22 மாதங்கள். பிறக்கும் குட்டி 90-125 கிலோ எடை இருக்கும். ஆண் குட்டி 9 அடி உயரமும், பெண் குட்டி 8 அடி உயரமும் இருக்கும். அரிதாக ஒரே சமயத்தில் இரட்டைக் குட்டிகளை ஈன்றெடுக்கும்.</p> <p>ஆப்ரிக்கா, ஆசியா யானைகள் ஒப்பீடு:உலகில் ஆசியா, ஆப்ரிக்கா யானைகள் என இரு வகைகள் உண்டு. அதில் ஆப்ரிக்கா யானைகள் சவன்னா, ஹர்ச் என இரு வகைப்படும். ஆசியாவில் மூன்று வகையான யானைகள் உள்ளன.</p> <p>ஆசியா யானைகள் பொதுவாக 11 அடி உயரம் கொண்டவை. ஆப்ரிக்கா யானைகள் 13 அடி உயரம் கொண்டவை. ஆப்ரிக்கா யானைகளில் ஆண், பெண்ணுக்கும் தந்தம் இருக்கும். ஆசியா யானைகளின் தும்பிக்கையில் பொருட்களை கையாளும் வகையில் மேல் பகுதியில் சிறு மடிப்பு உண்டு. ஆப்ரிக்க யானைகளில் தும்பிக்கையில் மேல் மற்றும் கீழ்புறமும் மடிப்புகள் இருக்கும்.ஆசிய யானைகளின் கால்களில் 4 மற்றும் 3 நகங்களும், ஆப்ரிக்க யானைகளின் கால்களில் 5 மற்றும் 4 நகங்களும் இருக்கும்.</p> <p><font size="1">( நன்றி - தினமலர்)</font></p> வைகரைதென்றல் (vaigaraithenral )http://www.blogger.com/profile/05735149285780447209noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5281612716723623188.post-37718090323752931312010-04-27T13:03:00.001-07:002010-04-27T13:03:51.053-07:00அழகரின்அபூர்வ வரலாறு<p><a href="http://lh5.ggpht.com/_b-CduGORYic/S9dDBwYKUlI/AAAAAAAAAQI/Vj6w56DhXds/s1600-h/image4.png"><img style="border-right-width: 0px; border-top-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px" border="0" alt="image" src="http://lh3.ggpht.com/_b-CduGORYic/S9dDI3bw5LI/AAAAAAAAAQM/LPSlKnY9hqg/image_thumb2.png?imgmax=800" width="474" height="446" /></a> </p> <p>ஒரு காலத்தில் இந்த உலகில் இறப்பு என்பதே இல்லாமல் இருந்தது. ஏனெனில் யாரும் தவறு செய்வதே கிடையாது. இருந்தும் ஒருவன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வதற்காக துரத்தி வரும் போது அங்கு வந்த தர்மதேவன் அவனை ஒரே அடியில் வீழ்த்தினார். இந்த விஷயத்தை கேள்விப் பட்ட சிவன், உலகில் தர்ம,நியாயம் அழிந்து விடக்கூடாது. </p> <p>அதை பாதுகாப்பது உன் பொறுப்பு. எனவே அதற்குரிய உருவத்தை உனக்கு தருகிறேன் என கூறி தர்மதேவனுக்கு, பற்கள் வெளியே தெரியும் படி ஒரு கொடூரமான உருவத்தை வழங்கி விட்டார். இதைக்கண்ட உயிர்கள் நாம் தப்பு செய்தால் தர்மதேவன் அழித்து விடுவான் என்று பயம் கொண்டன. நல்லது செய்யப்போய் நமது உருவம் இப்படி ஆகி விட்டதே என கவலை கொண்டான் தர்மதேவன். சரி! நமது உருவம் தான் இப்படி ஆகி விட்டது. நாம் தினமும் எழுந்தவுடன் விழிக்கும் முகமாகவது மிகவும் அழகாக இருக்க வேண்டும் என இந்த அழகர்கோவில் மலையில் தவம் இருந்தான். இவனது தவத்திற்கு மகிழ்ந்த அழகின் தெய்வமான விஷ்ணு, இவனுக்கு காட்சி கொடுத்து ''வேண்டியதை கேள்'' என்று கூறினார். அதற்கு தர்மதேவன், நான் இந்த மலையில் தவம் செய்த போது காட்சி கொடுத்தீர்கள். எனவே நீங்கள் நிரந்தரமாக இங்கேயே எழுந்தருளவேண்டும். அத்துடன் தினமும் ஒரு முறையாவது உங்களுக்கு பூஜை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும் என்றான். </p> <p>தர்மதேவனின் வேண்டுகோளின் படி மகாவிஷ்ணு சுந்தரராஜப்பெருமாளாக இந்த மலையில் எழுந்தருளினார். சுந்தரம் என்றால் 'அழகு'. எனவே அழகர் என்ற பெயரே நிலைத்து விட்டது. அத்துடன் தர்மதேவனுக்கு காட்சி கொடுத்த மலை அழகர் மலை என்றானது. இன்றும் கூட அழகர்கோவிலில் அர்த்தஜாம பூஜையை தர்மதேவனே செய்வதாக ஐதீகம்.</p> <p><strong>தல சிறப்பு :</strong> பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஸ்ரீரங்கம் முதலிடத்தையும், காஞ்சிபுரம் அடுத்த இடத்தையும் மூன்றாவது இடத்தை அழகர்கோவிலும் பெற்றுள்ளன. இத்தலத்தை பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ் வார், திருமங்கையாழ்வார், ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர். பீஷ்மரும், பஞ்சபாண்டவர்களும் இத்தல பெருமாளை தரிசித்து பலனடைந்துள்ளனர்.</p> <p><strong>கள்ளழகர் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது :</strong> அழகர்கோவில் மூலவர் பரமசாமி. ஸ்ரீதேவி,பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். மகாவிஷ்ணுவின் திருக்கோலங்களிலேயே அழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜப்பெருமாள் தான் பெயருக் கேற்றாற் போல் மிகவும் அழகாக இருப்பார். தர்மதேவனுக்கு காட்சி தர பெருமாள் வந்ததால் வைகுண்டத்தில் பெருமாளை காணாமல் மகாலட்சுமி பெருமாளைத்தேடி இங்கு வந்துவிட்டாள். மகாவிஷ்ணுவை விட மிக அழகான லட்சுமியைக்கண்ட தர்மதேவன், மகாலட்சுமியும் பெருமாளுக்கு அருகில் இங்கேயே தங்க வேண்டும் என அடம் பிடித்தார். இவனது வேண்டுகோளின் படி மகாலட்சுமி பெருமாளை கைப்பிடித்து அவருக்கு அருகில் கல்யாண சுந்தரவல்லி எனும் திருநாமத்துடன் இங்கு வீற்றிருக்கிறாள். இப்படி அழகான இருவரது திருமணக்கோலம் அனைவர் மனதையும் திருடிக்கொண்டது. மக்கள் மனதை கொள்ளை கொண்டதால் அழகர் 'கள்ளழகர்' ஆனார். இதனாலேயே இந்த பெருமாளை நம்மாழ்வார், 'வஞ்சக்கள்வன் மாமாயன்' என்கிறார்.</p> <p><strong>தேனூர் மண்டபத்தில் நடந்த விழா :</strong> மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் கொடுப்பதற்காக அழகர் கோயிலிலிருந்து மதுரைக்கு வரும் அழகர், தேனூர் மண்டபத்தில் சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் காட்சி தரும் சித்திரை திருவிழா ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தது. அதே போல் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு வரை மாசிமாதம் பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வந்தது. இப்படி சைவத்திற்கு தனிவிழா, வைணவத்திற்கு தனி விழா என மதுரையில் கொண்டாடப்பட்டு வந்ததை திருமலை நாயக்கர் இரண்டு விழாவையும் ஒன்றாக்கி சைவ, வைணவ ஒற்றுமை திருவிழாவாக ஆக்கி விட்டார்.</p> <p><strong>வைகை தோன்றியது எப்படி :</strong> மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண விருந்து சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. தங்கள் வீட்டு விருந்தைப் பற்றி பெருமையுடன் சிவனிடம் பெண் வீட்டார் பேசினர். ''தங்களுடன் வந்துள்ள அனைவரும் உடனடியாக சாப்பிடச் சொல்லுங்கள். இங்கே உணவுவகை கொட்டிக் கிடக்கிறது. சாப்பிடாமல் இருந்தால் வீணாக அல்லவா போய் விடும்?'' என்றனர். சிவன் அவர்களிடம், ''இப்போது யாருமே பசியில்லை என்கிறார்கள். இதோ, எனது கணங்களில் ஒருவனான இந்த குண்டோதரனுக்கு முதலில் விருந்து வையுங்கள். மற்றவர்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்,'' என்றார். விருந்தை மருந்தைப் போல ஒரே வாயில் போட்டு மென்று விட்டான் குண்டோதரன். பெண் வீட்டார் திகைத்தனர்.''மற்றவர்களை எப்படி சமாளிக்கப் போகிறோம். இந்த குண்டோதரன் இப்போது தின்றது போதாதென்று இன்னும் கேட்கிறானே,'' என வெட்கி நின்ற அவர்கள் அந்த இறைவனையே சரணடைந்தனர். திருமண வீட்டில் பெருமை பேசக்கூடாது என்பது இதனால் தான். அரண்மனைவாசிகளாயினும் அகந்தை கூடாது என்பது இச்சம்பவம் தரும் தத்துவம். சிவன் அன்னபூரணியை அழைத்தார். அவள் கொடுத்த உணவை சாப்பிட்டு விட்டு ஆறு, குளம், குட்டை, வாய்க்கால், ஏரி இவைகளில் உள்ள தண்ணீர் எல்லாம் குடித்து முடித்தான் குண்டோதரன்.அப்படியும் தாகம் தீராததால் ஈசனிடம் வந்து முறையிட்டான். ஈசன் தன் சடை முடியிலிருந்த கங்கையிடம், '' மதுரை நகருக்கு உடனே தண்ணீர் தேவைப்படுகிறது.  உடனே அங்கு பாய்ந்தோடு,'' என கட்டளையிட்டார். குண்டோதரனிடம், '' நீர் வரும் திசைநோக்கி கை வை. அந்த நீரை குடித்து உன் தாகத்தை தீர்த்து கொள்,'' என்றார். இதுவே 'வைகை' ஆனது. கங்கை பாய்ந்ததால் வைகையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. எனவே அது புண்ணிய நதியாக மாறியது. இப்படி கங்கையையும் வைகையையும் இணைக்கும் திட்டத்தை சிவன் அன்றே உருவாக்கி வைத்திருக்கிறார். இந்த நதி காற்றை விட வேகமாக வந்ததால் 'வேகவதி' எனப்பட்டது.வைகையை பாழடித்து விட்ட நாம், அழகரையே வாய்க்கால் கட்டி இறக்கி விட்டிருக்கும் நாம், அவரிடம் பாவங்களுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டு, மழை பொழிய வேண்டுவோம். </p> <p><strong>அழகர்கோவிலின் சிறப்பம்சம் :</strong>கருப்பண்ணசுவாமி: இத்தலத்தில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசுவாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்.பதினெட்டாம்படியான் என்று பக்தர்கள் மிகவும் பயபக்தியோடு அழைக்கப்படுகிறார்.இவரை கும்பிட்டால் நினைத்த காரி யங்கள் கைகூடும்.</p> <p><strong>கோட்டை: </strong>விவசாயிகள் விளைச்சல் அறுவடைக்கு முன்பு தங்கள் நிலத்தில் குறிப்பிட்ட இடத்தில் கோட்டை கட்டி அதில் இருக்கும் தானியங்களை அழகருக்கு காணிக்கையாக செலுத்துவார்கள்.</p> <p><strong>அழகர் கோயில் தோசை: </strong>காணிக்கையாகக் கிடைக்கும் தானியங்களை அரைத்து மாவாக்கி அதில் கோயில் சார்பாக தோசை சுட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இது பழநி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு போன்று மிகவும் புகழும், சிறப்பும் உடையது.</p> <p><strong>நூபுர கங்கை : </strong>சிலம்பாறு - ராக்காயி அம்மன் கோயில் அம்மன் கால் சிலம்பிலிருந்து மலைக்குகைக்குள் இருந்து வற்றாத ஜீவ நதியாக வந்து கொண்டிருக்கிறது <br />* மூலவர் மானிட பிரதிஷ்டை இல்லை. தெய்வ பிரதிஷ்டை. <br />* பெருமாள் சப்தரி ஷிகள் சப்த கன்னிகள் பிரம்மா விக்னேஷ்வர் ஆகியோரால் ஆராதிக்கப்படுகிறார். <br />* 6 ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற முக்கிய திவ்ய தேசம் <br />* சக்கரத்தாழ்வார் சப்த கன்னிகளால் ஆராதிக்கப்படுகின்றார். <br />* மற்ற தலங்களில் நின்ற கோலத்தில் மட்டுமே காட்சி தரும் ஆண்டாள் உற்சவராக உட்கார்ந்திருக்கிறார்.</p> <p><strong>மண்டூக முனிவருக்கு விமோசனம் தந்த விழா :</strong> முன்னொரு காலத்தில் மகாவிஷ்ணு இந்த உலகை அளக்க தனது திருவடியை தூக்கினார். அப்போது பிரம்மன், திருமாலின் தூக்கிய திருவடியை கழுவி பூஜை செய்தார். அப்படி கழுவிய போது திருமாலின் கால்சிலம்பு(நூபுரம்) அசைந்து அதிலிருந்து நீர்த்துளி பூமியிலுள்ள அழகர்மலை மீது விழுந்தது. கங்கையை விட புண்ணியமான இந்த தீர்த்தமே, நூபுர கங்கை என்ற பெயரில் இன்னும் அழகர் கோவில் மலையில் வந்து கொண்டிருக்கிறது. இந்த தீர்த்தத்தில் அமர்ந்து தான் சுபதஸ் என்ற முனிவர் அமர்ந்து பெருமாளை நினைத்து தியானம் செய்து கொண்டிருந் தார். அப்போது அவரைக்காண கோபக்கார முனிவரான துர்வாசர் அங்கு வந்தார். பெருமாளின் நினைப்பிலேயே இருந்த சுபதஸ் முனிவர், துர்வாசரை சரியாக உபசரிக்கவில்லை. இதனால் கோபமடைந்து துர்வாசர், ''மண்டூக பவ'' அதாவது, மண்டூகமான நீ மண்டூகமாகவே (தவளை) போ என சாபமிட்டார். இந்த சாபத்தினால் பதறிய சுபதஸ் முனிவர், துர்வாசரே, பெருமாளின் நினைப்பில் இருந்ததினால் உங்களை சரியாக உபசரிக்க முடியவில்லை, எனவே எனக்கு சாபவிமோசனம் தந்தருள வேண்டும் என வேண்டினார்.அதற்கு துர்வாசர், வேதவதி என்கிற வைகை ஆற்றில் தவம் செய். அப்போது அழகர்கோவிலிலிருந்து வரும் பெருமாளால் உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என கூறி செல்கிறார். சித்திரை திருவிழாவிற்காக அழகர்கோவிலிலிருந்து கிளம்பும் பெருமாள்,மதுரை தல்லாகுளத்தில் ஆண்டாள் தொடுத்த மாலையை சூட்டிக்கொண்டு குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார்.அழகர்கோவிலில் இருந்து பல்லக்கில் கிளம்பும் அழகர் பின் குதிரை வாகனம், சேஷவாகனம் என மாறுகிறார். சித்ராபவுர்ணமிக்கு மறுநாள், தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து சாபவிமோசனம் தருகிறார். இதன் பின் ராமராயர் மண்டகப்படியில் தசாவதாரம் எடுக்கிறார்.</p> <p><strong>நேர்த்திக்கடன் : </strong>தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி கொடுத்த அழகருக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக முடிக்காணிக்கை தருகின்றனர். எடைக்கு எடை நாணயம், எடைக்கு எடை தானியங்கள் ஆகியவற்றை தருகின்றனர். இத்தலத்தில் துலாபாரம் மிகவும் சிறப்பு.பெருமாளுக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம்.ஊதுவத்தி, வெண்ணெய் சிறு விளக்குகள் துளசி தளங்கள் பூக்கள் பூமாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம் செய்து அழகருக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம்.இது தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம்</p> <p> செய்யலாம்.</p> <p><font size="1">( நன்றி - தினமலர்)</font></p> வைகரைதென்றல் (vaigaraithenral )http://www.blogger.com/profile/05735149285780447209noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5281612716723623188.post-90862029231367889062010-02-05T14:22:00.001-08:002010-02-20T15:00:18.817-08:00செவ்வாய் கிரகம் ரோவர் 6<embed src="http://video.nationalgeographic.com/video/player/swf/ngplayer_syndicated.swf" flashVars="slug=mars-rover-six-vin&img=http://video.nationalgeographic.com/video/player/media/mars-rover-six-vin/mars-rover-six-vin_480x360.jpg&vtitle=Stuck%20Mars%20Rover%20About%20to%20Die%3F&caption=January%205%2C%202010%u2014Built%20to%20rove%20for%2090%20days%2C%20Spirit%20has%20lasted%20six%20years%20on%20Mars.%20But%20now%20it%27s%20stuck%20and%20may%20lose%20power%20by%20May.%20Even%20standing%20still%2C%20though%2C%20Spirit%20can%20do%20a%20surprising%20amount%20of%20science%2C%20NASA%20says.&permalink=http://video.nationalgeographic.com/video/player/news/space-technology-news/mars-rover-six-vin.html&share=true" name="flashObj" width="460" height="321" seamlesstabbing="false" allowfullscreen="true" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/shockwave/download/index.cgi?P1_Prod_Version=ShockwaveFlash"></embed>வைகரைதென்றல் (vaigaraithenral )http://www.blogger.com/profile/05735149285780447209noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5281612716723623188.post-33496933625899634312010-02-05T14:19:00.001-08:002010-02-20T14:58:58.801-08:00ஹவாஈ<embed src="http://video.nationalgeographic.com/video/player/swf/ngplayer_syndicated.swf" flashVars="slug=usa-hawaii-dest&img=http://video.nationalgeographic.com/video/player/media/usa-hawaii-dest/usa-hawaii-dest_480x360.jpg&vtitle=Destination%3A%20Hawai%27i&caption=Beautiful%20beaches%2C%20active%20volcanoes%2C%20and%20a%20rich%2C%20diverse%20culture%20make%20Hawai%27i%20a%20visitors%27%20paradise.&permalink=http://video.nationalgeographic.com/video/player/places/countries-places/united-states/usa-hawaii-dest.html&share=true" name="flashObj" width="460" height="321" seamlesstabbing="false" allowfullscreen="true" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/shockwave/download/index.cgi?P1_Prod_Version=ShockwaveFlash"></embed>வைகரைதென்றல் (vaigaraithenral )http://www.blogger.com/profile/05735149285780447209noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5281612716723623188.post-25796697326942095382010-02-04T13:53:00.001-08:002010-02-04T13:53:23.490-08:00அனகோண்டா<object width="400" height="334"><param name="movie" value="http://video.nationalgeographic.com/video/player/flash/syndicatedVideoPlayer.swf?vid=anaconda_bitesman"></param><param name="allowfullscreen" value="true"></param></param><embed src="http://video.nationalgeographic.com/video/player/flash/syndicatedVideoPlayer.swf?vid=anaconda_bitesman" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" width="400" height="334"></embed></object>வைகரைதென்றல் (vaigaraithenral )http://www.blogger.com/profile/05735149285780447209noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5281612716723623188.post-25245953351719563092010-02-04T13:49:00.000-08:002010-02-04T13:50:11.304-08:00அனகோண்டா குட்டிகள்<object width="400" height="334"><param name="movie" value="http://video.nationalgeographic.com/video/player/flash/syndicatedVideoPlayer.swf?vid=anaconda_young"></param><param name="allowfullscreen" value="true"></param></param><embed src="http://video.nationalgeographic.com/video/player/flash/syndicatedVideoPlayer.swf?vid=anaconda_young" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" width="400" height="334"></embed></object>வைகரைதென்றல் (vaigaraithenral )http://www.blogger.com/profile/05735149285780447209noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5281612716723623188.post-35094813941885920852010-02-04T13:47:00.000-08:002010-02-04T13:48:16.181-08:00அனகோண்டா பிறப்பு<object width="400" height="334"><param name="movie" value="http://video.nationalgeographic.com/video/player/flash/syndicatedVideoPlayer.swf?vid=anaconda_stalkscapybara"></param><param name="allowfullscreen" value="true"></param></param><embed src="http://video.nationalgeographic.com/video/player/flash/syndicatedVideoPlayer.swf?vid=anaconda_stalkscapybara" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" width="400" height="334"></embed></object>வைகரைதென்றல் (vaigaraithenral )http://www.blogger.com/profile/05735149285780447209noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5281612716723623188.post-51843741337031759542010-02-04T13:46:00.001-08:002010-02-04T13:46:58.407-08:00அனகோண்டா கால்<object width="400" height="334"><param name="movie" value="http://video.nationalgeographic.com/video/player/flash/syndicatedVideoPlayer.swf?vid=anaconda_breedingball"></param><param name="allowfullscreen" value="true"></param></param><embed src="http://video.nationalgeographic.com/video/player/flash/syndicatedVideoPlayer.swf?vid=anaconda_breedingball" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" width="400" height="334"></embed></object>வைகரைதென்றல் (vaigaraithenral )http://www.blogger.com/profile/05735149285780447209noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5281612716723623188.post-26207027537882526082010-02-02T14:19:00.000-08:002010-02-02T14:27:54.337-08:00அனகோண்டா<embed src="http://video.nationalgeographic.com/video/player/flash/syndicatedVideoPlayer.swf" flashvars="vid=wd-ep4-arkansassnake" name="flashObj" width="400" height="334" seamlesstabbing="false" allowfullscreen="true" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/shockwave/download/index.cgi?P1_Prod_Version=ShockwaveFlash"></embed>வைகரைதென்றல் (vaigaraithenral )http://www.blogger.com/profile/05735149285780447209noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5281612716723623188.post-54912461158638032502010-02-02T14:18:00.002-08:002010-02-02T14:26:46.673-08:00டால்பின்-பிஷிங் -கிட்ஸ்<embed src="http://video.nationalgeographic.com/video/player/flash/syndicatedVideoPlayer.swf" flashvars="vid=dolphin-fishing-kids" name="flashObj" seamlesstabbing="false" allowfullscreen="true" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/shockwave/download/index.cgi?P1_Prod_Version=ShockwaveFlash" width="400" height="334"></embed>வைகரைதென்றல் (vaigaraithenral )http://www.blogger.com/profile/05735149285780447209noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5281612716723623188.post-91735302456384554462010-02-02T14:18:00.001-08:002010-02-02T14:28:43.667-08:00பீவர்-கிட்ஸ்<embed src="http://video.nationalgeographic.com/video/player/flash/syndicatedVideoPlayer.swf" flashvars="vid=beaver-kids" name="flashObj" width="400" height="334" seamlesstabbing="false" allowfullscreen="true" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/shockwave/download/index.cgi?P1_Prod_Version=ShockwaveFlash"></embed>வைகரைதென்றல் (vaigaraithenral )http://www.blogger.com/profile/05735149285780447209noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5281612716723623188.post-27240966417337901962010-02-02T14:16:00.000-08:002010-02-02T14:29:21.765-08:00நரி<embed src="http://video.nationalgeographic.com/video/player/flash/syndicatedVideoPlayer.swf" flashvars="vid=fox-bat-eared-kids" name="flashObj" width="400" height="334" seamlesstabbing="false" allowfullscreen="true" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/shockwave/download/index.cgi?P1_Prod_Version=ShockwaveFlash"></embed>வைகரைதென்றல் (vaigaraithenral )http://www.blogger.com/profile/05735149285780447209noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5281612716723623188.post-71758102233884284992010-02-02T14:12:00.001-08:002010-02-02T14:29:43.936-08:00எரிமலை<embed src="http://video.nationalgeographic.com/video/player/flash/syndicatedVideoPlayer.swf" flashvars="vid=volcanoes-101-kids" name="flashObj" width="400" height="334" seamlesstabbing="false" allowfullscreen="true" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/shockwave/download/index.cgi?P1_Prod_Version=ShockwaveFlash"></embed>வைகரைதென்றல் (vaigaraithenral )http://www.blogger.com/profile/05735149285780447209noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5281612716723623188.post-12597972038433655652010-02-02T14:06:00.001-08:002010-02-02T14:31:35.857-08:00தவழை -ச்ற்றவ்பெர்ரி<embed src="http://video.nationalgeographic.com/video/player/flash/syndicatedVideoPlayer.swf" flashvars="vid=frog-strawberrypoisondart-tadpole-chi-kids" name="flashObj" width="400" height="334" seamlesstabbing="false" allowfullscreen="true" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/shockwave/download/index.cgi?P1_Prod_Version=ShockwaveFlash"></embed>வைகரைதென்றல் (vaigaraithenral )http://www.blogger.com/profile/05735149285780447209noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5281612716723623188.post-58139399714386291642010-02-02T14:01:00.000-08:002010-02-02T14:33:00.644-08:00ஆஸ்திரேலியா-மலை வரைவுகள்<embed src="http://video.nationalgeographic.com/video/player/flash/syndicatedVideoPlayer.swf" flashvars="vid=australia-rockart-chi-kids" name="flashObj" width="400" height="334" seamlesstabbing="false" allowfullscreen="true" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/shockwave/download/index.cgi?P1_Prod_Version=ShockwaveFlash"></embed>வைகரைதென்றல் (vaigaraithenral )http://www.blogger.com/profile/05735149285780447209noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5281612716723623188.post-72239522874161641712010-02-02T14:00:00.001-08:002010-02-02T14:33:17.756-08:00மின்னல்<embed src="http://video.nationalgeographic.com/video/player/flash/syndicatedVideoPlayer.swf" flashvars="vid=lightning-chi-kids" name="flashObj" width="400" height="334" seamlesstabbing="false" allowfullscreen="true" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/shockwave/download/index.cgi?P1_Prod_Version=ShockwaveFlash"></embed>வைகரைதென்றல் (vaigaraithenral )http://www.blogger.com/profile/05735149285780447209noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5281612716723623188.post-15548486022180378952010-02-02T13:58:00.001-08:002010-02-02T14:33:45.568-08:00ஓனான்<embed src="http://video.nationalgeographic.com/video/player/flash/syndicatedVideoPlayer.swf" flashvars="vid=lizard-frilled-ontherun-chi-kids" name="flashObj" width="400" height="334" seamlesstabbing="false" allowfullscreen="true" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/shockwave/download/index.cgi?P1_Prod_Version=ShockwaveFlash"></embed>வைகரைதென்றல் (vaigaraithenral )http://www.blogger.com/profile/05735149285780447209noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5281612716723623188.post-75931105344346307572010-02-02T13:56:00.001-08:002010-02-02T14:34:04.133-08:00விண்வெளி<embed src="http://video.nationalgeographic.com/video/player/flash/syndicatedVideoPlayer.swf" flashvars="vid=solar-system-101-kids" name="flashObj" width="400" height="334" seamlesstabbing="false" allowfullscreen="true" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/shockwave/download/index.cgi?P1_Prod_Version=ShockwaveFlash"></embed>வைகரைதென்றல் (vaigaraithenral )http://www.blogger.com/profile/05735149285780447209noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5281612716723623188.post-90398116686376157522010-02-02T13:48:00.000-08:002010-02-02T14:34:28.325-08:00நத்தை<embed src="http://video.nationalgeographic.com/video/player/flash/syndicatedVideoPlayer.swf" flashvars="vid=snail_cone" name="flashObj" width="400" height="334" seamlesstabbing="false" allowfullscreen="true" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/shockwave/download/index.cgi?P1_Prod_Version=ShockwaveFlash"></embed>வைகரைதென்றல் (vaigaraithenral )http://www.blogger.com/profile/05735149285780447209noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5281612716723623188.post-10167761622887228512010-02-02T13:47:00.000-08:002010-02-02T14:35:08.389-08:00கடல் நண்டு<embed src="http://video.nationalgeographic.com/video/player/flash/syndicatedVideoPlayer.swf" flashvars="vid=great-barrier-census-wcvin" name="flashObj" width="400" height="334" seamlesstabbing="false" allowfullscreen="true" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/shockwave/download/index.cgi?P1_Prod_Version=ShockwaveFlash"></embed>வைகரைதென்றல் (vaigaraithenral )http://www.blogger.com/profile/05735149285780447209noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5281612716723623188.post-22360584645586300212010-02-02T13:46:00.002-08:002010-02-02T14:35:49.175-08:00ப்லான்க்ட்டன்ஜெல்லி<embed src="http://video.nationalgeographic.com/video/player/flash/syndicatedVideoPlayer.swf" flashvars="vid=plankton_jelly" name="flashObj" width="400" height="334" seamlesstabbing="false" allowfullscreen="true" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/shockwave/download/index.cgi?P1_Prod_Version=ShockwaveFlash"></embed>வைகரைதென்றல் (vaigaraithenral )http://www.blogger.com/profile/05735149285780447209noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5281612716723623188.post-14462004039774352082010-02-02T13:46:00.001-08:002010-02-02T14:36:08.772-08:00கிளௌன்பிஷ்<embed src="http://video.nationalgeographic.com/video/player/flash/syndicatedVideoPlayer.swf" flashvars="vid=clownfish_amonganemones" name="flashObj" width="400" height="334" seamlesstabbing="false" allowfullscreen="true" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/shockwave/download/index.cgi?P1_Prod_Version=ShockwaveFlash"></embed>வைகரைதென்றல் (vaigaraithenral )http://www.blogger.com/profile/05735149285780447209noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5281612716723623188.post-24375676244850490142010-02-02T13:43:00.000-08:002010-02-02T14:36:37.140-08:00கடல் மீன்கள்<embed src="http://video.nationalgeographic.com/video/player/flash/syndicatedVideoPlayer.swf" flashvars="vid=shrimp_blind_cavefish" name="flashObj" width="400" height="334" seamlesstabbing="false" allowfullscreen="true" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/shockwave/download/index.cgi?P1_Prod_Version=ShockwaveFlash"></embed>வைகரைதென்றல் (vaigaraithenral )http://www.blogger.com/profile/05735149285780447209noreply@blogger.com0