வலைமனை பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் இனிய இரண்டாம் ஆண்டு தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
தீபத்திருநாளில்
வாழ்வில் வளமும் குதூகலமும் பெருகிட
இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
அன்புடன் வைகரைதென்றல்.
கிராமபுரங்களில் வசிக்கும் மக்கள் ஆரோக்கியமான உடல்நிலையை கொண்டுள்ளனர்.இதற்கு காரணம், நமது பாரம்பரிய நெறிமுறைகளை அவர்கள் தவறாமல் பின்பற்றுவதே ஆகும்.உடலிற்கு எண்ணெய் தேய்த்து குளிக்க்கும் போது , உடல் குளிர்ச்சி அடைவதுடன் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
இந்தியா போன்ற வெப்பமிகுந்த நாடுகளில், நமது உடல்நிலையை சீரான நிலையில் வைத்திருப்பது அவசியம்.
அன்றாட வாழ்க்கையில் நேரமின்மையின் காரணமாக, எண்ணெய் குளியலை தவிர்த்துவிடுகிறோம் ஆகவேதான், பண்டிகைகாலங்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பதன் அவசியம் பற்றி வலியுறுத்தப்படுகிறது. எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் நம்முடைய தோல் பகுதி உலர்வடையாமல் ஈரப்பதத்துடனேயே இருக்க உதவுகிறது. இந்த ஈரப்பதம், கிருமிகள் நம் தோல்பகுதி மூலம் உடலுக்குள் ஊடுருவாமல் தடுக்கிறது.
சாதாரணமாக எண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது
எண்ணெய் குளியலின் பிற நன்மைகள்:-
courtesy:Ask a doctor online
How often do you take oil bath?
Dear all,
Have you ever thought the need for oil bath in our busy schedule. In olden days our Grandmother used to run behind us with an oil bowl. Every weekend we used to take oil bath. But now that has changed. We take oil bath either on diwali or on any other festivals. It has become seasonal. And moreover we feel it as time consuming task to do it.
Let me tell you what all benefits you’ll have from oil bath.
அடுத்தடுத்து மூன்று கிரகணங்கள் வருவதால்,
பூமியில் தீய நிகழ்வுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு, என பெங்களூரை சேர்ந்த தம்பதியர் தெரிவித்துள்ளனர். அடுத்த மாதம் 7ம் தேதி, சந்திரகிரகணமும், 22ம்தேதி சூரிய கிரகணமும், ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி மீண்டும் ஒரு சந்திரகிரகணமும் தொடர்ந்து வருகின்றன. இந்த நூற்றாண்டில், மிக நீண்ட நேரம் நீடிக்கக்கூடிய சூரிய கிரகணம் 22ம் தேதி வானில் காணப்படுகிறது.
மூன்று கிரகணங்கள் தொடர்ச்சியாக ஏற்பட்ட சமயங்களில் பூமியில் பல கெட்ட நிகழ்வுகள் ஏற்பட்டதாக பெங்களூரை சேர்ந்த ஹரி-ஹேமா தம்பதியர் தாங்கள் எழுதிய "வரலாறு திரும்புமா?' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளனர். புராண காலத்தில் இதே போல மூன்று கிரகணங்கள் தோன்றிய போது மகாபாரத போர் ஏற்பட்டதாம். அதன் பின் ஏற்பட்ட தொடர் கிரகணங்களின் போது கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகை நகரம் கடலில் மூழ்கியதாம்.
கடந்த 1910 மற்றும் 1945 ஆகிய கால கட்டங்களில் மூன்று கிரகணங்கள் ஏற்பட்ட போது முதல் மற்றும் இரண்டாம் உலக போர் ஏற்பட்டதாம். இந்த கால கட்டத்தில் தான், ஜப்பானின் நாகசாகி நகரத்தின் மீது அணுகுண்டு வீசப்பட்டது. வரும் 2020ம் ஆண்டு, காலத்திற்குள் ஆறு முறை, தொடர்ந்து மூன்று கிரகண நிகழ்வுகள் ஏற்பட உள்ளன. எனவே, இந்த காலகட்டத்தில் பல்வேறு தீய நிகழ்வுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளன, என இந்த தம்பதியர் தங்களது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
நண்பர்களே, 23.12.2012 அன்று உலகம் அழியபோவதாக பல அறிவியல் & மேலை நாட்டுஜோதிட வல்லுனர்கள் ஏற்கனவே தெரிவித்து உள்ளனர்.அதை மெய்பிக்கும்வகையில் இவர்கள் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மாயன் என்ற வரலாற்று காலண்டேரில் 21.12.2012 -க்கு பிறகு நாட்களை குறிக்கும் குறியீடுகளே இல்லையாம் மற்றும் GMT (Goodman-Martinez-Thompson) வகை கால குறிப்பேடிலும் 23.12.2012 -க்கு பிறகு நாட்கள் இல்லையாம். GMT என்பது தற்போதும் நம்மால் கையாளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதை பற்றி மேலும் அறிய www.survive2012.com என்ற இணையத்தில் காணவும். பல்வேறு சாத்தியகூறுகள் & விளக்கங்கள் அதில் உள்ளன. தற்போது இதைப்பற்றி ஒரு ஆங்கில படமே தயார் ஆகிவருவது உங்களுக்கு தெரியுமா?? அந்த படத்தின் பெயரும் 2012 தான்.அது வரும் செப்டெம்பரில் உலகெங்கும் திரைக்கு வருகிறது.சமீபத்தில் தான் அதன் ட்ரைலர் வெளியிடப்பட்டது. நீங்கள் அதை youtube -இல் ''2012 full trailer '' என்று டைப் செய்து சர்ச் செய்து பார்க்கவும். மிகவும் முக்கியமானது.ஆக, இந்த ட்ரைலர் மற்றும் அந்த இணையம் இரண்டையும் பார்க்கவும்
by mr Alanraj,United Arab Emirates
(நன்றி - தினமலர்)
ஆண்டுதோறும் ஜூன் மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சிறந்த தந்தையரை பெருமைபடுத்தும் விதமாகவும், நன்றி கூறும் விதமாகவும் 1910ம் ஆண்டு முதல் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. பாசத்துக்கு எப்போதும் தாய்தான் உதாரணம். ஆனால் குழந்தைகளின் முன்னேற்றத்தில் தந்தையின் பங்கு முக்கியமானது. தந்தைதான் ஒரு குழந்தைக்கு வழிகாட்டியாக இருக்கிறார். இந்தியாவில் பெரும்பாலும் குடும்ப பொருளாதாரம் தந்தையை சார்ந்தே உள்ளது.
இந்தியா முழுவதும் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஒரு சர்வேயில் தந்தை குடித்துவிட்டு தகராறு செய்வதால் மனவேதனை அடைவதாக தெரிவித்துள்ளனர். தந்தையையே குழந்தைகள் முன்மாதிரியாக கொள்கின்றனர். குடும்பத் தலைவரிடம் காணப்படும் ஒழுக்க குறைபாடு குழந்தைகளையே கடுமையாக பாதிக்கிறது. தங்களது தவறுகளை திருத்திக்கொள்ள கிடைத்த வாய்ப்பாக இந்த தினத்தை தந்தைகள் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலைநாட்டிலிருந்து வந்திருந்தாலும் இந்தியாவிலும் தந்தையர் தினம் பிரபலமடைந்து வருகிறது. பெருநகரங்களில் தந்தையர் தினத்தை பற்றிய விழிப்புணர்வு காணப்படுகிறது. சில பள்ளிகள் தந்தையர் தினத்தின் போது குழந்தைகள் பங்கேற்கும் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. சிறிய வயதிலேயே குழந்தைக்கு தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இதன் நோக்கம். தந்தையும் குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்கி அவர்களுக்கு நல்லொழுக்கங்களை கற்றுத்தர வேண்டுமென ஊக்குவிக்கப்படுகின்றனர்.
(நன்றி - தினமலர்)